Ads Area

குவைத் மற்றும் ஐக்கிய அரபு ராஜ்ஜியம் போன்ற நாடுகளிலிருந்து இலங்கை வந்தோருக்கு கொரோனா தொற்று.

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 83 பேர் கொரோனா வைரஸ் நோயாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு ராஜ்ஜியம் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த வாரம் இலங்கை திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 25 பேர் கொரோனா நோயாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலே குறிப்பிட்ட 83 பேரில் இந்தோனேசியா, துபாய், மலேசியா, குவைத், ஐக்கிய அரபு ராஜ்ஜியம், தென் கொரியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் அடங்குகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த பின்னர், வெளிநாடுகளில் இருந்து இதுவரை 4 ஆயிரத்து 731 பேர் நாடு திரும்பியுள்ளனர்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe