Ads Area

கத்தாரிலிருந்து இந்தியா பயணிக்கவிருப்பவர்களுக்கான டிக்கட்டுக்கள் வழங்கும் பணி ஆரம்பம்!

கத்தாரிலிருந்து இந்தியாவுக்கு நாளை (மே-07) பறக்கவிருந்த விமானத்தின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

கத்தாரிலிருந்து இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்துச் செல்லும் முதல் விமானம் இந்தியாவின் கேரள மாநிலம் - கொச்சிக்கு நாளை (மே-07) செல்வதற்கு பதிலாக சனிக்கிழமை (மே-09) செல்லவிருப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. நாளை பறக்க விருந்த விமானப் பயணம் சனிக்கிழமை (மே-09)க்கு மாற்றப்பட்டமைக்கு தெளிவான காரணங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும் தொழில்நுட்ப காரணங்கள் தான் என்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அறிக்கையின் படி சனிக்கிழமை பறக்கவிருக்கும் விமானம் 200 பயணிகளை தாயகம் அழைத்துத்துச் செல்லவிருக்கிறது. இதற்கான டிக்கட்டுக்கள் இன்று முதல் இந்திய தூதகரத்தின் உயர் அமைப்பான இந்தியன் கலாச்சார நிலையத்தில் (Indian Cultural Centre - ICC) வைத்து வழங்கப்படுகின்றன. டிக்கட் வழங்கும் சேவை மாலை 3 மணிவரை நீடிக்கும் என்பதாகவும், விமான டிக்கட்டின் பெறுமதி கத்தார் பெறுமதியில் QR766 (இந்தியப் பெறுமதி - 16000) என்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டிக்கெட் விற்பனைக்காக வேண்டி ஏர் இந்தியா அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பயணிகளின் நலனுக்காக ICC சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. தற்போதைய அட்டவணை நிலவரப்படி 200 பயணிகள் எதிர்வரும் 10ம் திகதி திருவனந்தபுரத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு விமானங்களுக்கான பயணிகள் பட்டியல் கத்தாரிலுள்ள எம்பஸ்ஸியின் இணையத்தின் தங்களை பதிவு செய்தவர்களிலிருந்து தூதரகத்தால் இறுதி செய்யப்பட்டுள்ளன.

கற்பிணிகள், அவசர மருத்துவ வசதி தேவைப்படுபவர்கள், துன்பத்தில் உள்ள தொழிலாளர்கள், மற்றும் முதியவர்கள் போன்றவற்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக கத்தாரிலுள்ள இந்திய தூதரகம் விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

(கத்தார் தமிழ்)
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe