Ads Area

கொரோனாவினால் சவுதியில் இன்று 22 பேர் மரணம் ; மரண எண்ணிக்கை 480 ஆக உயர்ந்துள்ளது.

தகவல் - சம்மாந்துறை அன்சார் 

சவூதி அரேபியாவில் கடந்த 24 மணி நேரத்தில் (30.05.2020) புதிதாக 1,618 பேருக்கு  கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை அங்கு அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை  83,384 ஆக உயர்ந்துள்ளதாக சவுதியின் சுகாதார அமைச்சு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. 

மேலும் சவுதியில் இன்று மட்டும் கொரோனாவினால் 22 பேர் மரணமடைந்துள்ளனர் இவர்களோடு மொத்த மரண எண்ணிக்கை 480 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் (30.05.2020) புதிதாக 1,870 பேர் கொரோனா வைரஸில் இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் இவர்களோடு சேர்த்து மொத்தமாக அங்கு இதுவரை 58,883. பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை சவுதி அரேபியாவில் நாளை அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பணிக்கு திரும்பவிருக்கின்றன அதே போல் தடை செய்யப்பட்டிருந்த உள்ளுர் போக்குவரத்து சேவைகள் மற்றும் பள்ளிவாசல் தொழுகைகள் என அனைத்தும் நாளையிலிருந்து மீண்டும் வழமை போன்று இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe