Ads Area

அளுத்கம – தர்கா நகர் முஸ்லிம் இளைஞர் மீது பொலிஸார் தாக்குதல் நாமல் ராஜபக்ஷ கண்டனம்.

அளுத்கம – தர்கா நகரில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பொலிஸாரும் கலந்துகொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கடந்த மே 25 ஆம் திகதி மாலை இடம்பெற்றிருக்கும் இந்த சம்பவம் குறித்த சி.சி.ரி.வி காணொளி ஒன்றை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

குறித்த இளைஞனுக்கு கடுமையான காயங்கள் உடலில் ஏற்பட்ட போதிலும் அச்சம் காரணமாக அன்றைய தினம் வைத்தியசாலைக்கு செல்லவில்லை.

பின்னர் அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாக அலிசாஹிர் மௌலானா கூறியுள்ளார்.

தற்போதே இந்த காணொளியைப் பார்த்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் இது விடையத்தில் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

தர்கா நகர் தாரிக் அஹமட் பொலிஸாரால் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக இது விடையத்தில் விசாரனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe