நூருல் ஹுதா உமர்
சம்மாந்துறை வெளியீட்டுப் பணியகத்தின் 'நூற் கதையாடலும் கௌரவிப்பும்' என்ற ஒரு நிகழ்வு இம்மாதம் முதலாம் திகதி திங்கட்கிழமை மாலை சம்மாந்துறையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அவ்வெளியீட்டுப் பணியகத்தினால் வெளியிடப்பட்ட' சம்மாந்துறை வரலாறும் வாழ்வியலும்' என்ற நூலுக்கு பணி செய்தோர் பாராட்டப்பட்டனர்.
இந் நிகழ்வில் உரையாற்றிய பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் அவர்கள் கலாநிதி சுக்ரி அவர்கள் பங்குபற்றிய இறுதிப் பிரசித்தநிகழ்வு இந்நூல் வெளியிடே என்று குறிப்பிட்டார். அத்தோடு அவரது உரைச் சுருக்கத்தினையும் ஞாபகப்படுத்தினார்.
''சம்மாந்துறை வரலாறும் வாழ்வியலும்' என்ற இந்த நூல் வெளியீடு வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்தநிகழ்வாகும். சிறுபான்மைசமூகங்கள் தத்தமதுசமூகங்களில் வரலாற்றுஅறிவும் உணர்வும் மிக்கவர்களாகதிகழவேண்டும். இல்லாவிட்டால் அந்தசமூகங்களின் இருப்புகேள்விக்குரியதாகிவிடும். சமூகங்கள் தமதுதனித்துவத்தைப் பேணுவதற்குவரலாற்றுப் பதிவுமுக்கியமாகும். ஆகவேதான் ஒவ்வொரு சமூகமும் வரலாற்று அறிவும் உணர்வும் கொண்டிருக்கவேண்டும். குறிப்பாக முஸ்லிம்கள் - பல்லினநாட்டில் வாழும் நாம் நமதுகலை, கலாசார தொகுப்புக்களைவெளியிடவும் - பாதுகாக்கவும் வேண்டும்.
இவ்வாறு சுக்ரி அவர்களின் இறுதித் தாகம் நமதுசமூகத்தின் இருப்புக்கு நமது வரலாறுபதிவு செய்யப்படவேண்டும் என்பதோடுஅந்தஉணர்வும் மிக்கவர்களாக நாம் வாழவேண்டும் என்பதுமாகும்.
சுக்ரிபோன்றமிகநிதானமானவரலாற்றுஅறிஞர்கள் நமக்குத் தேவைப்படுகிறார்கள். எல்லாசமூகங்களோடும் இணைந்துவாழ்ந்தசமகால முஸ்லிம் பேரறிஞர்களில் ஒருவர் அவர்.
பொதுவாகவே, முஸ்லிம் அறிஞர்கள் நிதானமிக்கவர்களாகவே தமதுகருத்துக்களை வெளியிடுகின்றவர்களாக இருந்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் முஸ்லிம் அறிஞர்கள் அல்லதுசமூகம் எவ்வாறு தீவிரவாதத்தைநேசிப்பவர்களாக இருக்கமுடியும். அல்லதுஅதன் வழியே தமது நிறுவனங்களைஅல்லது இயக்கங்களை கொண்டு செல்கின்றவர்களாக ஆக முடியும் என்றும் றமீஸ் அப்துல்லாஹ் கேள்வி எழுப்பினார்.
இந்நிகழ்வின் முதன்மை அதிதியாக சம்மாந்துறைப் பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ ஏ.எம்.எம் நௌசாட் அவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.