Ads Area

சவுதியில் உள்ளவர்கள் மாத்திரமே இம் முறை ஹஜ்ஜுக்கு அனுமதிக்கப்படுவார்கள் - வெளிநாட்டினருக்கு தடை.

சவுதி அரேபியாவில் இம்முறை அந் நாட்டுக் குடிமக்கள் மற்றும் சவுதியில் வாழும் வெளிநாட்டினர் ஆகியோருக்கு மாத்திரமே ஹஜ் கடமையை நிறைவேற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது என சவுதி அரேபிய ஹஜ் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார நடைமுறைகளைப் பேணி மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கை யாத்திரிகர்களுடனே இம்முறை ஹஜ் கடமை நிறைவேற்றப்படும். 

ஒவ்வொரு வருடமும் ஹஜ்ஜுக்கு பல இலட்சத்திற்கு அதிகமான  உலக மக்கள் சவுதியில் ஒன்று கூடுவார்கள் என்றாலும் இம் முறை வெளிநாடுகளிலிருந்து எவருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது. உள்ளுர் யாத்திரிகர் மட்டுமே ஹஜ் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்பதாக சவுதி உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பொதுவாக துல்ஹஜ் மாதத்தில் நடைபெறும் ஹஜ் யாத்திரையில் சவூதி வாழ் மக்களுக்கு  அனுமதி இல்லாத நிலையில், இந்த ஆண்டு கூட்டங்களைத் தவிர்ப்பதற்காகவும், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சவூதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் இங்கு வசிக்கும் வெளிநாட்டவர்கள் மட்டும் ஹஜ் சடங்குகளைச் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா நெருக்கடி நிலையில், பொதுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நாட்டின் தலைமையின் விருப்பத்திற்கேற்ப முடிவுகள் இருக்கும் என சவூதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு ஜூலை மாதம் பிற்பகுதியில் திட்டமிடப்பட்டுள்ள இந்த யாத்திரை உலகின் மிகப்பெரிய மதக் கூடுகைகளில் ஒன்றாகும். வருடந்தோறும் சுமார் 2.5 மில்லியனுக்கும் அதிகமான யாத்ரீகர்கள் மக்கா மற்றும் மதீனாவில் உள்ள இஸ்லாத்தின் புனிதத் தலங்களை தரிசிப்பதற்காக ஒரு வாரப் பயணமாக ஹஜ்ஜிற்கு வருகை தருகின்றனர். ஒரு முறையாவது ஹஜ் பயணம் மேற்கொள்வது ஒவ்வொரு இஸ்லாமியருக்கும் வாழ்நாள் கடமையாகும்.

சவூதி அரேபியா கடந்த மார்ச் மாதத்தில் இஸ்லாமியர்களிடம் தங்கள் ஹஜ் பயணத் திட்டத்தை ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டது. மேலும் உம்ராவிற்கும் மறு அறிவிப்பு வரும் வரையில் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலதிக விபரம் - https://saudigazette.com.sa
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe