Ads Area

சவுதியில் இன்று கொரோனாவுக்கு 40 பேர் பலியாகியுள்ளனர் - மொத்த பலி எண்ணிக்கை 1,307 ஆக உயர்வு.

தகவல் - சம்மாந்துறை அன்சார் 

சவூதி அரேபியாவில் கடந்த 24 மணி நேரத்தில் (22.06.2020) புதிதாக 3,393 பேருக்கு  கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை அங்கு அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை  161,005. ஆக உயர்ந்துள்ளதாக சவுதியின் சுகாதார அமைச்சு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் சவுதியில் இன்று மட்டும் கொரோனாவினால் 40 பேர் மரணமடைந்துள்ளனர் இவர்களோடு மொத்த மரண எண்ணிக்கை 1,307 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் (22.06.2020) புதிதாக 4,045 பேர் கொரோனா வைரஸில் இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் இவர்களோடு சேர்த்து மொத்தமாக அங்கு இதுவரை 105,175 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


சவுதி அரேபியாவில் ஊரடங்கு நீக்கப்பட்டு அந் நாடு வழமைக்கு திரும்பியிருந்தாலும் அங்கு புதிய கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் கொரேனா மரணங்களின் எண்ணிக்கையும் குறையவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe