Ads Area

பின்தங்கிய பிரதேசங்களை அபிவிருத்தி செய்து மக்களுக்கு சேவை செய்ய எனக்கொரு சந்தர்ப்பம் தாருங்கள்.

அம்பாறை மாவட்டத்தில் புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த அகில இலங்கை மக்கள் காங்ரசுடன் மக்கள் இணைய வேண்டுமெனவும் இதன் மூலம் அம்பாறை மாவட்ட மக்கள் எதிர்நோக்கியுள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமெனவும் அக் கட்சியின் கீழ் திகாமடுல்ல தொகுதியில் 4ம் இலக்கத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவித்துள்ளார்.

மருதமுனையில் அண்மையில் இடம் பெற்ற கூட்டமொன்றில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

அம்பாறை மாவட்டத்தில் தனி நபர்களை மாத்திரம் திருப்திப்படுத்துவதற்காக சிரிலங்கா முஸ்லிம் காங்ரஸ் செயற்படுகிறது என்றும் அக்கட்சியினர் மக்களை பற்றிய எந்ததொரு விடையத்தினையும் கவனத்தில் எடுப்பதில்லை என்றும் கூறினார்.

மக்கள் எதிர்நோக்கியுள்ள பல பிரச்சினைகளை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு தேர்தல் காலங்களில் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு தனிபர்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை முன்னேற்றுவதிலேயே முஸ்லிம் காங்ரஸ் அக்கறை காட்டிவருகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.

தொடர்ச்சியாக முஸ்லிம் காங்ரஸ் கட்சிக்கு வாக்களித்தால் மாற்றத்தினை காண முடியாது. அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்ரஸ் ஊடாக அமைதியான முறையில் புதிய புரட்சியை ஏற்படுத்த மக்கள் அனைவரும் ஒன்றினைவதன் மூலமே சாத்தியமாககும்.

இத் தேர்தலில் புதிய மாற்றத்தினை கொண்டு வர நாம் அனைவரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும். எனக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது அம்பாறை மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கும், மக்களுக்கு சேவை செய்வதற்கும் இச் சந்தர்ப்பத்தை எனக்கு சாதகமாக்கித் தாருங்கள் என்றார்.

ஊடகப் பிரிவு.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe