சம்மாந்துறையில் கொமினிகேசன் ஒன்றிற்கு வருகை தந்த சுகாதாரத்துறையில் பணி புரியும் ஒரு பெண் ஊழியர் ஈசி கேஸ் பண்ணுவதற்காக இருபதாயிரம் ரூபாவை வழங்குகிறார் அந்தக் கடைக்காரர் வந்த அந்த பெண்ணிடம் கேட்கின்றார் இந்தப் பணத்தை யாருக்கு அனுப்புகிறீர்கள் என்று அதற்கு அந்தப் பெண் எனது சொந்தக்காரர் ஒருவருக்கு என பதிலளிக்கிறார்.
மீண்டும் ஈசி கேஸ் மூலம் பணம் அனுப்பப்பட்ட பின்னர் அந்தப் பெண் கடைக்கு வெளியில் வந்து மீண்டும் தொடர்பினை மேற் கொள்கிறார் ஆனால் தொலைபேசி சுவிஸ்ட் ஓப் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது பல தடவை முயற்சித்தார் ஆனால் எந்தப் பதில்களும் இல்லை.
தான் ஏமாற்றப்பட்டுள்ளதாக பின்னர்தான் அந்தப் பெண் உணர்ந்து கொண்டார்.
இறுதியில் அந்தப் பெண் அழுது கொண்டு கடையை விட்டு வெளியேறிச் சென்ற காட்சி மனதிற்கு வேதனையாக இருந்தது படித்தவர்கள் இவ்வாறு இலகுவாக ஏமாற்றப்படும் போது பாமர மக்கள் எவ்வாறெல்லாம் ஏமாற்றப்படுவார்கள்.
எனவே ஏமாற்றுப் பேர்வழிகளின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி யாரும் நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை இழந்து விடாதீர்கள், இச் சம்பவம் ஒரு சிறந்த படிப்பினையாகும்.