Ads Area

சம்மாந்துறையில் பெண் ஒருவருக்கு நடந்த படிப்பினை தரும் துயரச் சம்பவம்.

தகவல் - றசூல் (SLPA)

சம்மாந்துறையில் கொமினிகேசன் ஒன்றிற்கு வருகை தந்த சுகாதாரத்துறையில் பணி புரியும் ஒரு பெண் ஊழியர் ஈசி கேஸ் பண்ணுவதற்காக இருபதாயிரம் ரூபாவை வழங்குகிறார் அந்தக் கடைக்காரர் வந்த அந்த பெண்ணிடம் கேட்கின்றார் இந்தப் பணத்தை யாருக்கு அனுப்புகிறீர்கள் என்று அதற்கு அந்தப் பெண் எனது சொந்தக்காரர் ஒருவருக்கு என பதிலளிக்கிறார்.

பணம் ஈசிக்கேஸ் மூலம் அனுப்பப்படுகிறது பின்பு அந்தப் பெண் கடைக்கு வெளியில் வந்து யாரோ ஒருவருக்கு தொடர்பினை மேற்கொண்டார் அதன் பின்பு மீண்டும் சில தொகையை நீட்டி அதே இலக்கத்திற்கு ஈசி கேஸ் அனுப்பச் சொன்னதும் கடைக்காரர் சந்தேகத்துடன் இப் பணத்தை உண்மையில் உங்களது சொந்தக்காரருக்குத்தானா அனுப்புகிறீர் எனக் கேட்டதும் ஆம் என சற்று கோபத்துடன் பதிலளிக்கின்றார். 

மீண்டும்  ஈசி கேஸ் மூலம்  பணம் அனுப்பப்பட்ட பின்னர் அந்தப் பெண் கடைக்கு வெளியில் வந்து மீண்டும் தொடர்பினை மேற் கொள்கிறார் ஆனால் தொலைபேசி சுவிஸ்ட் ஓப் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது பல தடவை முயற்சித்தார் ஆனால் எந்தப் பதில்களும் இல்லை.

அதன் பிறகுதான்  கடைக்காரரிடம் வந்து விடயத்தை சொல்லுகிறார் டயலொக் நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்ததாகவும் தனக்கு இலட்சக்கணக்கில் பரிசு தரப்பட உள்ளதாகவும் என்னை குறித்த நம்பருக்கு ஈசிகேஸ் போடச் சொன்னதாகவும் கூறுகிறார்.

தான் ஏமாற்றப்பட்டுள்ளதாக பின்னர்தான் அந்தப் பெண் உணர்ந்து கொண்டார்.

இறுதியில் அந்தப் பெண் அழுது கொண்டு கடையை விட்டு வெளியேறிச் சென்ற காட்சி மனதிற்கு வேதனையாக இருந்தது படித்தவர்கள் இவ்வாறு இலகுவாக ஏமாற்றப்படும் போது பாமர மக்கள் எவ்வாறெல்லாம் ஏமாற்றப்படுவார்கள்.


எனவே ஏமாற்றுப் பேர்வழிகளின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி யாரும் நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை இழந்து விடாதீர்கள், இச் சம்பவம் ஒரு சிறந்த படிப்பினையாகும்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe