Ads Area

சவுதியில் கொலைக் குற்றத்திற்காக 28 வருடங்கள் சிறையில் இருந்தவருக்கு நேற்று தலை துண்டித்து மரணதண்டனை நிறைவேற்றம்.

சவுதி அரேபியாவைச் சேர்ந்த காதி பின் கதாமா (Hadi Bin Kadamah) என்பவர் தனது உறவினர் ஒருவரைக் 1992ம் ஆண்டு கொலை செய்தமைக்காக 28 வருடங்கள் சிறை தண்டனை பெற்று வந்த நிலையில், கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தார் அவருக்கு மன்னிப்பு வழங்காததால் நேற்று அவருக்கு தலை துண்டித்து மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

1992ம் ஆண்டு சவுதி அரேபியாவில் உள்ள தெஹ்ரான் பிரதேசத்தில் தனது உறவுக்காரர் ஒருவரை காதி பின் கதாமா (Hadi Bin Kadamah) என்பவர் வாய்த்தர்க்கம் காரணமாக கொலை செய்தமைக்காக கைது செய்யப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இந் நிலையில் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தாரின் மன்னிப்பினைப் பெறும் வரையில் அவர் கடந்த 28 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த பெப்ரவரி மாதம் இவருக்கான மரணதண்டனை  நிறைவேற்றப்படவிருந்த நிலையில் சவுதி அரேபிய மன்னர் சல்மான் மற்றும் அவரது மகன் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆகியோரின் தலையீட்டில் அவரது மரண தண்டனை கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தாரின் மன்னிப்பை பெறும் நோக்கில் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இது வரையிலும் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தார் அவரை மன்னிக்காத நிலையிலேயே அவருக்கு நேற்று (23-06-2020) மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. காதி பின் கதாமா (Hadi Bin Kadamah) மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் கூட மன்னிப்பை எதிர்பார்த்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதி பின் கதாமா (Hadi Bin Kadamah) அவரது குற்றம் தொடர்பாகவும் அவருக்கு மன்னிப்பை பெற்றுத் தரும்படியும் சவுதி அரச குடும்பத்துக்கு கடிதம் எழுதியிருந்தார் அதில், தனக்கும் தனது உறவினரான சுல்தான் என்பவருக்கும் வாய்த்தகறாறு ஏற்பட்ட போது அவரைத் தாக்கியிருந்தேன் அதனால் அவர் கீழே விழுந்தார் அவரை நான் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தேன் இருந்தும் அவர் மரணித்துவிட்டார் இதற்காக தற்போது மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளேன் தயவு செய்து தனக்கு கொலை செய்யப்பட்ட குடும்பத்தாரிடமிருந்து மன்னிப்பை பெற்றுத் தரும்படி உருக்கமாக எழுதியிருந்தார்.

இதனால் சவுதி அரச குடும்பத்தாரினாலும், அசிர் பிரதேச உயர் அதிகாரிகளினாலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடம் மன்னிப்பைப் பெற்றுக் கொள்ள பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவர்களுக்கு நஷ்ட ஈட்டுத் தொகையினை பெற்றுக் கொடுக்கவும் முயற்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்தது எனினும் சல முயற்சிகளும் தோல்வியுற்ற நிலையில், கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தார் நஷ்ட ஈட்டுத் தொகையையோ, மன்னிப்பையோ வழங்காத நிலையில் நேற்று அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் கொலைக் குற்றங்களுக்காக மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்படும் பின்னர் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தாரிடம் மன்னிப்பை பெற்றுக் கொள்ளப்படும் வரை அவர் சிறையில் அடைக்கப்படுவார். கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் கொலை செய்தவரை மன்னித்தால் அல்லது நஷ்ட ஈட்டுத் தொகையினை பெற்றுக் கொள்ள இணங்கினால் கொலை செய்தவர் விடுதலை செய்யப்படுவார் அவர்கள் மன்னிக்காது விட்டால் மரண தண்டனை நிறைவேற்றப்படும். இவ்விடையத்தில் சவுதி அரேபிய மன்னருக்கு கூட அவரை விடுதலை செய்ய அதிகாரம் கிடையாது என்பது குறிப்பிடத் தக்கதாகும். 

செய்தி மூலம் - https://gulfnews.com
தமிழில் மொழிமாற்றம் -  சம்மாந்துறை அன்சார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe