சவுதி அரேபியாவைச் சேர்ந்த காதி பின் கதாமா (Hadi Bin Kadamah) என்பவர் தனது உறவினர் ஒருவரைக் 1992ம் ஆண்டு கொலை செய்தமைக்காக 28 வருடங்கள் சிறை தண்டனை பெற்று வந்த நிலையில், கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தார் அவருக்கு மன்னிப்பு வழங்காததால் நேற்று அவருக்கு தலை துண்டித்து மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இது வரையிலும் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தார் அவரை மன்னிக்காத நிலையிலேயே அவருக்கு நேற்று (23-06-2020) மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. காதி பின் கதாமா (Hadi Bin Kadamah) மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் கூட மன்னிப்பை எதிர்பார்த்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சவுதி அரச குடும்பத்தாரினாலும், அசிர் பிரதேச உயர் அதிகாரிகளினாலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடம் மன்னிப்பைப் பெற்றுக் கொள்ள பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவர்களுக்கு நஷ்ட ஈட்டுத் தொகையினை பெற்றுக் கொடுக்கவும் முயற்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்தது எனினும் சல முயற்சிகளும் தோல்வியுற்ற நிலையில், கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தார் நஷ்ட ஈட்டுத் தொகையையோ, மன்னிப்பையோ வழங்காத நிலையில் நேற்று அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் கொலைக் குற்றங்களுக்காக மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்படும் பின்னர் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தாரிடம் மன்னிப்பை பெற்றுக் கொள்ளப்படும் வரை அவர் சிறையில் அடைக்கப்படுவார். கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் கொலை செய்தவரை மன்னித்தால் அல்லது நஷ்ட ஈட்டுத் தொகையினை பெற்றுக் கொள்ள இணங்கினால் கொலை செய்தவர் விடுதலை செய்யப்படுவார் அவர்கள் மன்னிக்காது விட்டால் மரண தண்டனை நிறைவேற்றப்படும். இவ்விடையத்தில் சவுதி அரேபிய மன்னருக்கு கூட அவரை விடுதலை செய்ய அதிகாரம் கிடையாது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
செய்தி மூலம் - https://gulfnews.com
தமிழில் மொழிமாற்றம் - சம்மாந்துறை அன்சார்.