Ads Area

சவுதியிலிருந்து விடுமுறையில் சென்றவர்கள் தொடர்பில் ஜவசாத் (Jawazat) அலுவலகம் விடுத்துள்ள அறிவிப்பு.

சவுதியிலிருந்து Re-entry visas களில் தங்கள் நாடுகளுக்கு மற்றும் ஏனைய நாடுகளுக்கு விடுமுறையில் மற்றும் ஏனைய காரணங்களுக்காகச் சென்ற வெளிநாட்டினர் சவுதி அரேபியாவில் நிலவியுள்ள கொரோனா அச்சம் முடியும் வரை மீண்டும் சவுதிக்குல் அனுமதிக்கப்படமாட்டார்கள் என சவுதி அரேபிய ஜவசாத் அலுவலகம் (The Directorate General of Passports - Jawazat) தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் கொரோனா அச்சம் நிலவுவதற்கு முன்னர் சவுதியிலிருந்து Re-entry visas க்களில் தங்கள் நாடுகளுக்கு விடுமுறைக்காக மற்றும் ஏனைய காரணங்களுக்காக பல்வேறு நாடுகளில் தங்கியுள்ள சவுதி குடியிருப்பாளர்களது மீள் வருகை தொடர்பில் ஜவசாத் அலுவலகத்திடம் வினவப்பட்ட போதே ஜவசாத் அலுவலகம் மேற்கண்டவாறு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.


சவுதி அரேபியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கள் மீதான தடை தொடர்ந்தும் அமுலில் இருப்பதினால் கொரோனா அச்சம் முற்றாக நீங்கிய பின்னரே பல்வேறு நாடுகளில் தங்களது ரி-என்ரி விசாக்கள் முடிந்துள்ள நிலையிலும் தங்கியுள்ள வெளிநாட்டவர்களை மீள அழைப்பது தொடர்பான அறிவித்தல்கள் சவுதி அரேபிய உத்தியோகபூர்வ செய்தித் தளங்களில் வெளியிடப்படும் என ஜவசாத் அலுவலகம் தெரிவித்துள்ளது.


செய்தி மூலம் - https://saudigazette.com.sa
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe