சவுதியிலிருந்து Re-entry visas களில் தங்கள் நாடுகளுக்கு மற்றும் ஏனைய நாடுகளுக்கு விடுமுறையில் மற்றும் ஏனைய காரணங்களுக்காகச் சென்ற வெளிநாட்டினர் சவுதி அரேபியாவில் நிலவியுள்ள கொரோனா அச்சம் முடியும் வரை மீண்டும் சவுதிக்குல் அனுமதிக்கப்படமாட்டார்கள் என சவுதி அரேபிய ஜவசாத் அலுவலகம் (The Directorate General of Passports - Jawazat) தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கள் மீதான தடை தொடர்ந்தும் அமுலில் இருப்பதினால் கொரோனா அச்சம் முற்றாக நீங்கிய பின்னரே பல்வேறு நாடுகளில் தங்களது ரி-என்ரி விசாக்கள் முடிந்துள்ள நிலையிலும் தங்கியுள்ள வெளிநாட்டவர்களை மீள அழைப்பது தொடர்பான அறிவித்தல்கள் சவுதி அரேபிய உத்தியோகபூர்வ செய்தித் தளங்களில் வெளியிடப்படும் என ஜவசாத் அலுவலகம் தெரிவித்துள்ளது.
செய்தி மூலம் - https://saudigazette.com.sa
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.