Ads Area

கத்தாரில் இரு இலங்கையர்கள் மரணம்! நல்லடக்க நிகழ்வில் பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்டனர்!

கத்தாரில் நேற்று (21) மரணமடைந்த ஓட்டமாவடி ஜுனைத் ஹாஜியார் அவர்களின் மகள், சல்சபீலாவின் ஜனாஸா நல்லடக்கம் நேற்றிரவு இஷாத் தொழுகையின் பின்னர் (21.07.2020ம் திகதி செவ்வாய்க்கிழமை) கத்தார் - அபூ ஹமூர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதன் போது நாரம்மலயைப் பிறப்பிடமாகவும் பொலன்னறுவையை வசிப்பிடமாகவும் கொண்ட அப்துல் கரீம் முஹம்மது பௌஸ் அவர்களின் ஜனாஷாவும் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.

இதில் பெருந்திரளான இலங்கையர்கள் கலந்து கொண்டு தொழுகையிலும் பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.

நன்றி - கத்தார் தமிழ்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe