Ads Area

இலங்கையில் ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் ஒரு குழந்தை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுகிறது.

இலங்கையில் ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் ஒரு குழந்தை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுகிறது என்றும், ஒவ்வொரு நாளும் குறைந்தது 4 பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்றும், குற்றம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குற்றப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரிஜந்த ஜெயகொடி தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு மட்டும் 5,292 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களும், 6 மணித்தியாலங்களுக்கு ஒரு பெண் பாலியல் வன்புணர்வுட்படுத்தப்பட்டுள்ள அடிப்படையில் 1,642 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த புள்ளிவிபரம் அமைகிறது. மாறாக, முறைப்பாடுகள் தர தயங்குகிற போக்கும் காணப்படுகிறது.

சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பான பாதுகாப்புக்கு சிறப்பு கவனம் எடுக்கப்படுகிறது. இந்த சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகளுக்காக 44 பொலிஸ் பிரிவுகளின் கீழ் 44 பிரதேச பணியக பிரிவுகள் காணப்படுகின்றன. அவைகள் தொடர்ந்தும் செயற்பாட்டிலேயே இருக்கின்றன. முறைப்பாடுகளை அங்கு முன்வைக்க முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.

செய்தி - https://english.newstube.lk
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe