முல்லைக்கு தனது தேரை விட்டு கொடுத்த பாரி வள்ளல் குறித்த செய்தியை சங்கத் தமிழில் நாம் படித்திருக்கிறோம். இந் நிலையில் பாரிவள்ளல் பரம்பரையின் அடுத்த வாரிசு என்று கூறப்படுவது போல் துபாயின் பட்டத்து இளவரசர் செயல்பட்டுள்ளார்.
துபாய் நாட்டின் பட்டத்து இளவரசராகவும், அந்நாட்டின் நிர்வாக கவுன்சில் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூம் என்பவர் மற்ற உயிரினங்களிடம் அன்பு காட்டி வருபவர் என்பதும் விலங்கியல் பூங்காவில் இருக்கும் ஏராளமான விலங்குகளை தத்தெடுத்து பராமரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
முல்லைக்கு தனது தேரையே பரிசாக கொடுத்த பாரி வள்ளல் போல் சிறுபறவைக்காக தனது காரை பரிசாக கொடுத்த துபாய் பட்டத்து இளவரசர் குறித்த செய்திகள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.