Ads Area

பாடசாலைப் பேருந்துகளுக்கு மஞ்சல் நிறம் பூசும் நடவடிக்கை ஆரம்பம்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய பாடசாலை மாணவர்களின் பேருந்து சேவைக்கு பயன்படும் பேருந்துகளுக்கு நிறப்பூச்சு பூசும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

மாணவர்களின் போக்குவரத்திற்காக மட்டும் பயன்படுத்தவே இவ்வாறு பேருந்துகளுக்கு நிறப்பூச்சு பூசும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய தற்போது 10 பேருந்துகளுக்கு மஞ்சள் நிறம் பூசப்பட்டுள்ளாக இலங்கை போக்குவரத்து சபை தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று அச்ச நிலை காணப்படுவதையடுத்தே ஜனாதிபதியின் ஆலோசணைக்கு அமைவாக பாடசாலை மாணவர்களுக்கு பிரத்தியேக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe