Ads Area

சவுதியில் உள்ள அனைத்து தனியாத்துறை ஊழியர்களும் சீருடை அணிய வேண்டும்.

சவுதியில் உள்ள அனைத்து தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் ஆடை வரைமுறைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து தரப்பு ஊழியர்களும் சீருடை அணிய வேண்டும் என மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் அகமது அஹ்மத் அல்-ராஜி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு துறையிலும், ஊழியர்களின் இணக்கத்தை உறுதி செய்யும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் , ஆண்-பெண் என அவர்களது பணிக்கு ஏற்றவாறு சீருடை இருக்கவேண்டும் என கூறினார்.

இந்த அமைச்சரவை ஆணை சவுதி தொழிலாளர் சட்டத்தின் 38 வது பிரிவின் ஒரு பகுதியாக பணியிடத்தில் பின்பற்றப்படும். மேலும், சீருடை அணியாத ஊழியர்களுக்கு நிர்வாகத்தினர் அபராதம் விதிக்கவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த முடிவுகளின் மூலம், சவூதி தொழிலாளர் சந்தையை மேம்படுத்துவதற்கும், அதன் சூழலை மேம்படுத்துவதற்கும், தொழில்நுட்ப விதிமுறைகள் மற்றும் விவரக்குறிப்புகளை தரப்படுத்துவதற்கும், முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

செய்தி மூலம் - https://saudigazette.com.sa
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe