இலங்கையில் மாடறுப்புக்கு தடை கொண்டுவரவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆளும் கட்சி குழுக்கூட்டத்தில் தெரிவித்த நிலையில் அதற்கு அடுத்த நாள் நடைபெற்ற அமைச்சரவையில் குறித்த யோசனையை ஒரு மாத காலத்திற்கு தள்ளி வைப்பதாக அரசு அறிவித்ததுடன், மாடறுப்பு தொடர்பில் அனைத்து மட்டத்திலும் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்தார்.
அதன் அடிப்படையில் கலந்துரையாடுவதற்க்கான சந்தர்ப்பம் கேட்டு சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ சார்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.
ஊடக பிரிவு,
சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ