Ads Area

சம்மாந்துறை முன்னாள் அமைச்சர் எம்.ஐ. அன்வர் இஸ்மாயில் அவர்களின் 13வது ஞாபகார்த்த நிகழ்வு.

மொஹமட் ஹனீபா.

முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.ஐ. அன்வர் இஸ்மாயில் அவர்களின் 13வது ஞாபகார்த்த கத்தமுல் குர்ஆன் தமாம், துஆ பிராத்தனை , சிறப்புரை நிகழ்வு 2020/09/14 இஷா தொழுகையின் பின் ஊடகவியலாளர் ஏ.ஜே.எம்.ஹனீபா தலைமையில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை உத்தியோகத்தர் ஜனாப் ஜவாஹிர் அவர்களின் முழு ஏற்பாட்டில் அவருடைய இல்லத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மெளலவி ஏ.சீ.ஏ.எம். புஹாரி அவர்கள் ஞாபகார்த்த உரையினையும், இலங்கை தென் கிழக்கு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அப்துல்லா அவர்களினால் மர்ஹூம் எம்.ஐ.அன்வர் இஸ்மாயில் அவர்கள் தொட பான விஷேட சிறப்புரையும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மர்ஹூம் அன்வர் இஸ்மாயில் அவர்களின் சகோதரி உட்பட குடும்ப உறவினர்கள், நண்பர்கள், அவருடைய அபிமானிகள், உலமாக்கள் என பலர் கலந்து கொண்டனர்.








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe