ஐ.எல்.எம் நாஸிம்-
பெரும் போக நெற்செய்கையின் விளைச்சலை அதிகரிக்கும் வழிகள் தொடர்பான கருத்தரங்கு (10) மல்வத்தை விவசாய விரிவாக்கல் நிலையத்தில் மல்வத்தை விவசாய போதன ஆசிரியரும் மல்வத்தை விரிவாக்கள் நிலையத்தின் பொறுப்பதிகாரியுமான எம்.டி.எ கரீம் தலைமையில் இடம் பெற்றது.
சம்மாந்துறை மல்வத்தை பிரதேசத்திற்குட்பட்ட 30 கண்டங்களில் விவசாயிகளுக்காக கட்டம் கட்டமாக கருத்தரங்கு இடம்பெறுவதுடன் ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு திணைக்களத்தின் அதிகாரிகள் பிரதம அதிதியாக கலந்து கொண்டுள்ளனர்.
இக் கருத்தரங்களில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் விவசாயிகளால் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டன
யானை தாக்கத்தினால் வயல் நிலங்களுக்கு செல்ல முடியாமல் காணப்படுவதாலும் யானைகள் வயல் நிலங்களை சேதப்படுத்துவாதால் மிகவும் மன வேதனைகளுக்கு உள்வாங்கப்படுவாதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட மல்வத்தை கணபதிபுரம் பகுதியில் வசிக்கும் எஸ்.சோதிலிங்கம் (வயது 59) என்ற விவசாயியே (09) கீரை பிடுங்கி கொண்டு இருக்கும் போது காட்டு யானை தாக்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.