கொரோனா காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 97 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.
அதன்படி 73 பேர் கட்டாரில் இருந்தும் , 24 பேர் அபுதாபியில் இருந்தும் இன்று காலை விசேட விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளனர்.
நாட்ட வந்தடைந்த அவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.