அஸ்ஸலாமு அலைக்கும்
முகநூல் மூலமாக ஒருதாயின் கண்ணீரை துடையுங்கள்.
தற்போது பலராலும் சேப்படும் விடயம்"சுனாமியில் காணாமல் போன மகனை 16 வருடங்களுக்கு பின்னர் மாறுவேடத்தில் சென்று கண்டுபிடித்த தாய் "இதே போன்று சுனாமியால் மாயமான ஒரு 03 வயது சுஜைத் எனும் சின்ன குழந்தையின் ஓர் உண்மை கதை ...
மருதமுனையைச் சேர்ந்த பிள்ளையின் தாய் கண்ணீருடன்...
அன்று ஞாயிற்று கிழமை காலை நான் வழமை போன்று வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தேன்.மகன் சுஜைத் வீட்டின் முன்னாடி உள்ள வீதியில் விளையாடிக் கொன்டிருந்தார் கடல் வருகுது கடல் வருகுது எனும் சத்தம் கேட்டவுடன் ஓடிப்போய் பிள்ளையை பார்த்தேன் பிள்ளையை வீதியில் காணவில்லை. அடுத்த நொடி நான் கடலால் அடித்து செல்லப்பட்டேன்.
சுனாமி வந்து போனதன் பின்பு நானும் எனது கணவரும் மகன் சுஜைத்தை தேடிச்சென்றோம் அங்கு எனது முன்வீட்டு பிள்ளை உங்கள் மகன் ஆலமரமொன்றில் இருந்து இறக்கி கொஞ்சம் முன்னாடி லொரி ஒன்றில் ஆக்களுடன் போகின்ரார் என்றார். பிறகு நாங்கள் 3 நாட்களாக தேடினோம் எங்கும் எனது மகன் கிடைக்க வில்லை அதன் பிறகு எனது தம்பியின் வீட்டில் நெசவு செய்யும் நௌபர் தனது பிள்ளையை பார்பதற்கு அம்பாரை வைத்தியசாலைக்கு போன வேலையில் எனது மகன் அவரை அடையாளம் கண்டுகொண்டு "மாமா என்னை உம்மாகட்ட கூட்டிட்டு போங்க " என்று சொல்லியிருக்கின்றார் அவர் திரும்பி பார்க்க சுஜைத் பிள்ளைகளுடன் டீயும் பன்னும் சாப்பிட்டுக் கொண்டு நின்றுள்ளார்.
பிறகு பொலிசிடம் மகன் சுஜைத்தை கூட்டிக்கொன்று போய் இது எனது மருமகன் நான் கூட்டிக்கொண்டு போகின்றேன் என்று சொல்லியதும் மகன் சுஜைத்திடம் பொலிசார் இது யாரென்டு கேட்ட போது "மாமாவின் வீட்ட வார மாமா" என சொல்லி இருக்கிரார். பொலிசார் சந்தேகத்தில் பிள்ளையின் பெற்றோர்களை கூட்டிவருமாறு சொல்லி இருக்கின்றார்கள். அவர் நாங்கள் இருக்கும் இடம் தெரியாமல் தேடி அலைந்து எனது தம்பியை கண்டு நடந்ததை சொல்லியிருக்கின்றார். சுனாமி அடித்து மூண்றாவது நாள் உடனே எனது கனவரும் அவரின் கூட்டாளியும் அம்பாறை வைத்திய சாலைக்கு சென்ற போது அங்கு எனது மகன் இல்லை ....அழுகையுடன்....
அங்கு விசாரித்த போது "இங்கு இருந்த பிள்ளைகளை இடப்ப ற்றாக்குறை காரணமாக உகனைக்கு இடமாற்றியதாக சொல்லி இருக்கின்றார்கள் .உடனே உகனைக்கு சென்றபோது அங்கும் மகன் சுஜைத் இருக்க வில்லை அங்கு விசாரித்தபோது சுனாமியில் தாய் தந்தை இழந்த பிள்ளைகள் என்று சொல்லி ஒவ்வரால் ஒவ்வொரு பிள்ளைகளை கூட்டி சென்றுவிட்டதாக சொல்லி இருக்கின்ரார்கள்.
அவ்வளவுதான் எனது மகனை இன்றுவரை தேடிக்கொன்றிருக்கின்றேன் ஒரு தகவலும் இல்லை (சுருக்கமாக)
தயவு செய்து எனது மகனை தேடுவதற்கு உதவி செய்யுங்கள்.அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் அருள் பாலிப்பானாக ஆமீன் ...
மேலதிக தகவலுக்கு
0776551818
0752027111