Ads Area

இலங்கைப் பணியாளர்களை நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கை மீண்டும் நவம்பர் மாதம் முதல் ஆரம்பம்.

( ஐ. ஏ. காதிர் கான் )

மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிவதற்காகச் சென்ற இலங்கைப் பிரஜைகளை நாட்டிற்குஅழைத்து வரும் செயற்பாடுகள், நவம்பர் மாதம் முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

நாட்டிலுள்ள கண்காணிப்பு முகாம்களில் காணப்படும் இட வசதிகளைக் கருத்திற் கொண்டு, அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து சுமார் 45 ஆயிரம்  பேர் நாடு திரும்புவதற்கு எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதேவேளை, வௌிநாடுகளில் கொரோனாத் தொற்றுக்குள்ளான நிலையில் 68 இலங்கைப் பிரஜைகள் உயிரிழந்துள்ளதாக, வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 இலட்சம் ரூபாவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மங்கள ரந்தெனிய மேலும் தெரிவித்துள்ளார்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe