முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் 3 பேரை திவி நகும வழக்கில் இருந்து கொழும்பு உயர் நீதிமன்றம் விடுவித்தது.
திவி நகும திட்டத்தில் ஊழல் குற்றச்சாட்டு இடம்பெற்றது என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் 3 பேர் மீது சட்டமா அதிபர் குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருந்தார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவத்துடன் கூடிய விளம்பரங்கள் அச்சிட திவி நகும திட்டத்தினுாடாக ரூ .29.4 மில்லியன் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
செய்தி மூலம் - http://www.newswire.lk