Ads Area

இலங்கை விமான நிலையம் திறந்தவுடன் 4 பிரிவுகள் மூலம் பயணிகளை இலங்கைக்கு அனுமதிக்க நடவடிக்கை.

விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் நான்கு பிரிவுகள் மூலம் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுற்றுலா பயணிகள், இலங்கை மாணவர்கள், வெளிநாட்டு பணியாளர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் என 4 பிரிவுகளின் கீழ் இலங்கைக்கு அழைத்து வர முடியும்.

விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் ரஜீவ் சூரியஆராச்சி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் 22ம் திகதியளவில் இலங்கை விமான நிலையத்தினை முற்றாக திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe