சம்மாந்துறை கமு/சது/அல் முனீர் வித்தியாலயத்தில் 2022ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட மாணவத் தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டு அரங்கில் அதிபர் A.A.ஜப்பார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் சிறப்பு வளவாளராக மனூஸ் அபூபக்கர் அவர்கள் கலந்து கொண்டார். இதில் பிரதி அதிபர் A.முகம்மட் றிஸ்வான், ஒழுக்காற்று குழு ஆசிரியர்களான A.L.M.ஆரிப், Mrs.L.சம்சுதீன், Mrs.A.R.F. பரீசா ஆகியோர், மற்றும் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்வுக்கு சகல வழிகளிலும் நடாத்துவதற்கு அனுமதி வழங்கிய சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் M.S.சஹுத்துல் நஜீம், அதிபர் A.A.ஜப்பார், திறன் பட ஒழுங்கமைத்த ஒழுக்காற்றுக் குழு ஆசிரியர்கள், Covid-19 நிலைமையிலும் சுகாதார வழிமுறைகளை பேணி இடத்தை ஒதுக்கித் தந்த பிரதேச சபை சம்மாந்துறை, அதன் ஊழியர்கள், ஜனாதிபதி விளையாட்டு அரங்கில் இதை நடாத்துவதற்கு சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் பாடசாலையின் சார்பாக நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறான நிகழ்வுகள் மாணவர்களின் தலைமைத்துவ ஆற்றல்களையும், தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும் நோக்கோடு ஏற்பாடு செய்யப்படுகிறது.