Ads Area

95,000 அமெரிக்க டொலர்கள், 18,000 யூரோக்கள் மற்றும் 37,000 சவூதி ரியால்களை துபாய்க்கு கடத்த முயன்றவர்கள் கைது.

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயங்களை டுபாய்க்கு கொண்டு செல்ல முற்பட்ட ஐந்து சந்தேகநபர்கள் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து சுமார் 25 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்களிடம் இருந்து 95,000 அமெரிக்க டொலர்கள், 18,000 யூரோக்கள் மற்றும் 37,000 சவூதி ரியால்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. 

(நியூஸ் வயர்)



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe