வரக்காபொல மற்றும் காலி பிரதேசங்களில் நேற்று இடம்பெற்ற இருவேறு முச்சக்கர வண்டி விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
குருநாகல் - பேருவளையில் இருந்து பயணித்த முச்சக்கரவண்டி வரகாபொல துல்ஹிரிய சந்திக்கு அருகில் கொழும்பிலிருந்து அனுராதபுரத்திலிருந்து பயணித்த பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் 10 வயதுடைய சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று பெண்களும் ஆண் ஒருவரும் காயமடைந்த நிலையில் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் உறவினர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, நேற்று முன்தினம் காலியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
காலி, ரத்கம பிரதேசத்தில் வெள்ளபாட புகையிரத கடவையில் முச்சக்கர வண்டியுடன் புகையிரதம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெலியத்தவிலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த ரஜரட்ட ரெஜினி விரைவு ரயிலில் முச்சக்கரவண்டி மோதியுள்ளது.
மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அடங்குகின்றனர்.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.