பொருட்களை இறக்குமதி செய்கிறோம் என்ற போர்வையில் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டுக்கு அனுப்பிய வர்த்தகர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகலவிடம் தெரிவித்துள்ளார்.
சிஐடி விசாரணையில் ரூ. 260 மில்லியன் (1.3 மில்லியன் அமெரிக்க டாலர்) களை பொருட்களை இறக்குமதி செய்ததாக கூறி வர்த்தகர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாக அரச செய்தித்தாள் தினமின செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகம் தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்போது இரண்டு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சந்தேக நபர்களுக்கு பயணத் தடை விதிக்குமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
180 நாள் வர்த்தகத் திட்டத்தின் கீழ் இந்த நிதி மோசடியை நடத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபர்கள் இருவருக்கு கொழும்பு பிரதான பயணத் தடை விதிக்கப்பட்டது.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.