Ads Area

கத்தாரில் நடைபெறும் சர்வதேச விழாவில் முதல்முறையாக இலங்கை இளைஞனின் ஓவியம்.

கத்தாரில் நடைபெறும் சர்வதேச விழாவில் முதல்முறையாக இலங்கை இளைஞனின் ஓவியம்.

இலங்கையின் இறக்காமத்தைச் சேர்ந்த தற்போது கத்தார் நாட்டில் வசித்து வரும் ஓவியக் கலைஞர் நஸார் சர்பான் அவர்களின் குதிரை ஓவியம் கத்தார் சர்வதேச விழாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

கத்தாரா அரங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சர்வதேச விழாவில் நீங்களும் சென்று இவ் இளைஞனின் இவ் ஓவியத்தை கண்டு ரசிப்பதுடன், அவரை நேரில் சந்தித்து பாரட்டி, வாழ்த்துக்களைதெரிவிக்கவும் முடியும்.

2022 பெப்ரவரி 12 வரை நடைபெறுகின்ற இவ் விழாவில் அமெரிக்கா உட்பட 11 நாடுகள் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் பங்கேற்கின்றன.

மேலும் கத்தாரில் நடைபெற்று வரும் இச் சர்வதேச விழாவில் நேற்று ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பு மற்றும் துணிந்தெழு சஞ்சிகையின் பணிப்பாளர் ஜே.எம் பாஸித் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டதுடன், சகோதரன் நஸார் சர்பான் அவர்களையும் சந்தித்து உரையாடியமை குறிப்பிடத்தக்கது.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe