Ads Area

சவுதியில் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கம் - சவுதி வர PCR தேவையில்லை, தனிமைப்படுத்தல் இல்லை.

சம்மாந்துறை அன்சார்.

சவூதி அரேபியாவில் உள்ள உள்துறை அமைச்சகம், நேற்று முதல் பல கொரோனா கட்டுப்பாடுகளை அதிரடியாக நீக்கியுள்ளது. PCR சோதனை முடிவு சான்றிதழ்கள், தனிமைப்படுத்தல் மற்றும் பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உட்பட கொரோனா வைரஸ் தொடர்பான பல பின்வரும் கட்டுப்பாடுகளை சவுதி அரேபியா நீக்கியுள்ளது.

1. மக்கா, மதீனா ஆகிய இரண்டு புனித பள்ளிவாசல்களில் சமூக இடைவெளி நீக்கப்பட்டுள்ளது ஆனால் பள்ளியினுள் முகக் கவசம் அணிதல் அவசியம்.

2. திறந்தவெளியில் முகக்கவசம் அணிதல் அவசியமில்லை ஆனால் அடைக்கப்ப்பட்ட இடங்களில் முகக்கவசம் அணிதல் வேண்டும்.

03. நிகழ்வுகளில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த சமூக விலகம் நீக்கப்பட்டுள்ளது.

4. சவுதி அரேபியாவிற்கு வருபவர்களுக்கு பீ.சி.ஆர் சோதனை அவசியமில்லை.

6. சவூதி அரேபியாவிற்கு வருபவர்களுக்கான நிறுவன தனிமைப்படுத்தல் மற்றும் வீட்டு தனிமைப்படுத்தல்கள் இல்லை.

7. தென்னாப்பிரிக்கா, நமீபியா, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, லெசோதோ, ஈஸ்வதினி, மொசாம்பிக், மலாவி, மொரிஷியஸ், ஜாம்பியா, மடகாஸ்கர், அங்கோலா, சீஷெல்ஸ், போன்ற நாடுகளுக்கு விதிக்கப்பட்ட சவுதிக்கான விமானத் தடை நீக்கம்.

5. அனைத்து வகையான விசிட் விசாக்களில் சவூதி அரேபியாவிற்கு வருபவர்கள், அவர்கள் சவுதியில் தங்கியிருக்கும் காலத்தில், கொரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சைக்கான செலவுகளை ஈடுகட்டுவதற்கான காப்பீடு வைத்திருக்க வேண்டும்.









Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe