சம்மாந்துறையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுடன் பிரதேச செயலாளர் குழுவினர் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் நிகழ்வு ஒன்று சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம் பெற்றுள்ளது.
விவசாயத்துக்கு தேவையான எரிபொருளை தடையின்றி வழங்குவதற்காகவும் மேலதிகமாக சேமித்துவைக்க எடுக்கப்படும் முயற்சியை முறியடிப்பதுடன் சீரான விநியோக முறைமையை ஏற்படுத்துவது தொடர்பாகவும் சம்மாந்துறை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுடன் கலந்துரையாடப்பட்டது.
மேலும் சம்மாந்துறையில் எரிபொருள் பதுக்கலை தடுக்க பொலிஸாரினால் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவும் உள்ளது. இது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு இதோ.