Ads Area

எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக்கோரி ஆசிரியர்கள் போராட்ட ஊர்வலம்.

 பாறுக் ஷிஹான்

எரிபொருள் பிரச்சினைக்குத்தீர்வு வழங்குமாறு கோரி ஆசிரியர்கள் போராட்ட ஊர்வலமொன்றினை இன்று (19) முன்னெடுத்தனர்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, கல்விச்சேவையில் காணப்படும் குறைபாடுகள் உடனடியாக நீக்கப்பட வேண்டியும் சம்பந்தப்பட்டவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் கோரி கல்வி பொது சாதாரண பரீட்சை விடைத்தாள் மதீப்பீடு கடமைக்காக வந்திருந்த ஆசிரியர்கர் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன், இப்போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை வெளிப்படுத்தி தமது எதிர்ப்பினை வெளியீட்டு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

மேலும், வரிசையில் நிற்போரே உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைச் சிந்தியுங்கள். எரிபொருள் இல்லாமல் கடமையைத்தொடர முடியாது, கொழும்பு பாடசாலைக்கு மட்டுமா எரிபொருள் பிரச்சினை? போன்ற வாசகங்களை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் கோஷங்களை வலியுறுத்தினர்.

அத்துடன், இப்போராட்டமானது கல்முனை உவெஸ்லி உயர்தர தேசிய  பாடசாலை முன்பாக ஆரம்பமாகி பிரதான வீதி வழியாக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தை வந்தடைந்து நிறைவடைந்தது.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அப்பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் விற்பனை நிலையத்தின் முன்பாகவும் சிறிது நேரம் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்ததுடன், இறுதியாக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.ரம்ஷீன் பக்கீர் தலைமையில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சமூக  பொலிஸ் பிரிவுப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எல் ஏ.வாஹிட் நெறிப்படுத்தலில் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தலைவர் ஜெஸ்மி எம்.மூஸா தலைமையிலான ஆசிரியர் குழு கலந்துரையாடல் மேற்கொண்ட பின்னர் சுமூகத்தீர்வு எட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe