கொழும்பு மாவட்டத்தில் சில பிரதேசங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில்👇🏻
⚠️பாராளுமன்ற வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்,
⚠️உயர் நீதிமன்றம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள்,
⚠️ஜனாதிபதி செயலகம்,
ஜனாதிபதி மாளிகை,
⚠️கடற்படைத் தலைமையகம்,
⚠️பொலிஸ் தலைமையகம்,
⚠️அக்குரேகொட பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத் தலைமையகம்,
⚠️கொம்பனி தெரு விமானப்படை தலைமையகம்,
⚠️மலர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகம்,
⚠️கொள்ளுப்பிட்டி அலரி மாளிகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்,
⚠️பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முப்படைத் தளபதிகளின் இல்லங்கள்
இவ்வாறு அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.