Ads Area

கொழும்பு மாவட்டத்தின் அதிவுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம்-வெளியானது விஷேட வர்த்தமானி..

 


கொழும்பு மாவட்டத்தில் சில பிரதேசங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.


அதனடிப்படையில்👇🏻


⚠️பாராளுமன்ற வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், 

⚠️உயர் நீதிமன்றம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள், 

⚠️ஜனாதிபதி செயலகம், 

ஜனாதிபதி மாளிகை, 

⚠️கடற்படைத் தலைமையகம், 

⚠️பொலிஸ் தலைமையகம், 

⚠️அக்குரேகொட பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத் தலைமையகம்,

⚠️கொம்பனி தெரு விமானப்படை தலைமையகம், 

⚠️மலர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகம், 

⚠️கொள்ளுப்பிட்டி அலரி மாளிகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்,

⚠️பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முப்படைத் தளபதிகளின் இல்லங்கள் 


இவ்வாறு அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe