Ads Area

மீண்டும் நெருக்கடிக்குள் நாடு: எரிசக்தி அமைச்சரின் விசேட அறிவிப்பு.

 


ஆகஸ்ட் 25 ஆம் திகதி வழங்கப்பட்ட நிலக்கரி ஒப்பந்தம் நேற்று அமைச்சரவையால் இரத்து செய்யப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகபூர்வ ருவிட்டர் பதிவிலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் கோரிக்கைக்கு அமைய இந்த டெண்டர் இரத்து செய்யப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இலங்கை நிலக்கரி பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது, இது நாட்டை மீண்டும் மின்சார நெருக்கடிக்குள் தள்ளக்கூடும். ஒக்டோபர் 28ஆம் திகதி வரை போதுமான அளவு நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது. 

அடுத்த சில நாட்களுக்கு தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்யாவிட்டால், இலங்கையில் தினசரி 10 மணிநேரம் வரை மின்வெட்டு ஏற்படும் எனவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe