Ads Area

இலங்கையிலிருந்து பணிக்காக வெளிநாடு செல்ல முயற்சிப்போருக்கு முக்கிய அறிவித்தல்!

 வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறித்து பொது மக்கள்‌ மத்தியில்‌ ஆர்வம்‌ காணப்பட்டூ வருகின்ற நிலையில்‌ அவர்களை இலக்கு வைத்‌ பல்வேறு மோசடி நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறித்து எமக்கு அறியக்‌ கிடைத்துள்ளது. குறிப்பாக ருமெனியா, போலந்து ஜப்பான்‌ தென்‌ கொரியா மற்றும்‌ இஸ்ரேல்‌ ஆகிய நாடுகளில்‌ வேலைவாய்ப்புக்கள்‌ கிடைக்கப்‌ பெற்றுள்ளதாக பொய்யான தகவல்களைக்‌ கூறி பல்வேறு ஊடகங்களின்‌ வாயிலாக பொதுமக்களை ஏமாற்றும்‌ முயற்சிகளை சில மோசடிக்காரர்கள்‌ மேற்கொண்டு வருகின்றனர்‌.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப்‌ பணியகத்தில்‌ பதிவு செய்யப்பட்டு அதற்கான உரிய ஆவணத்தை பெற்றுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள்‌ மற்றும்‌ அந்த நிறுவனத்தின்‌ வலைதளத்தில்‌  குறிப்பிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும்‌ இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்‌ பணியகத்தின்‌ வலைதளத்தின்‌ ஊடாக பெற்றுக்‌ கொள்ள முடியும்‌. அத்தோடு குறித்த வேலைவாய்ப்புக்காக பணம்‌ மற்றும்‌ உங்கள்‌ கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன்பாக குறித்த வேலைவாய்ப்பு நிறுவனம்‌ சட்டரீதியாக நிறுவப்பட்டுள்ளதா என்பதை பரிசீலனை செய்து பார்க்குமாறு கேட்டுக்‌ கொள்கின்றறோம்‌.


இது தொடர்பான அனைத்து தகவல்களையும்‌ www.slbfe.lk வலைதளத்தின்‌ ஊடாகவோ, 1989 எனும்‌ தொலைபேசி இலக்கத்தின்‌ ஊடாகவோ 24 மணிநேரமும்‌ பெற்றுக்‌ கொள்ள முடியும்‌.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe