Ads Area

மாணிக்கமடு விபுலானந்தா முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு.

 நூருல் ஹுதா உமர்


இணைந்த கரங்கள் அமைப்பினால் மாணிக்கமடு பின்தங்கிய பிரதேசத்தில் அமைந்துள்ள விபுலானந்தா முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் மற்றும் விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்வு பாடசாலையின் பொறுப்பாசிரியர் காளிதாசன் சிவாஜினி தலைமையில் இன்று இடம்பெற்றது.

இணைந்த கரங்கள் அமைப்பின் பிரதிநிதிகளான லோ. கஜரூபன், எஸ்.காந்தன், கி.சங்கீத், ரா. தஜன், தமிழரன் சனா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கல்விகற்கும் கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர். இந்நிகழ்வில் ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய செயலாளர் டீ.நிரோஜன், செல்லத்தம்பி தங்கமலர், முன்பள்ளி ஆசிரியர் கிருஸ்ணன் சர்மிளா, முன்பள்ளி பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். இப் பணிக்கு முழுதான  நிதி பங்களிப்பை வழங்கி இணைந்த கரங்களுடாக  கைகோர்த்து இடை விடாது இப் பயணத்தின் நோக்கத்தையும்,நம் மாணவச் செல்வங்களின் வலியையும் உணர்ந்து இணைந்த கரங்கள் உறவினர்களும் நண்பர்களும் இணைந்து வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது..

Slideshow

1 / 5
2 / 5
3 / 5
4 / 5
5 / 5

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe