Ads Area

இலங்கைக்கு வழங்கிய 400 மில்லியன் டொலர்கள் ஒரு கடன் வசதி அல்ல. இது ஒரு நாணய மாற்றம் Currency Swap.

  உலக வங்கி இலங்கைக்கு வழங்கிய 400 மில்லியன் டொலர்கள் ஒரு கடன் வசதி அல்ல. இது ஒரு நாணய மாற்றம் அல்லது Currency Swap. அதாவது எமது ரூபாய்களைக் கொடுத்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு டொலர்களை வாங்கிக் கொள்வது. இப்படி ஒரு Currency Swap இனை நாம் ஏற்கனவே பங்களாதேசிடம் செய்து கொண்டிருக்கிறோம். அதனை இன்னும் திருப்பிக் கொடுக்கவில்லை என்பது வேறு விடயம். கடனைக் கட்டாமல் விடுவது நமக்கு புதுசா என்ன? வங்காளிதான் வாய் ஓயாமல் கேட்டுக் கொண்டிருக்கிறான்.


விடயத்திற்கு வருவோம். இந்த Currency Swap இற்கான கால எல்லை தெரியவில்லை. அனேகமாக ஒரு வருடம் என்றே நினைக்கிறேன். ஏனெனில் Currency Swap களிற்கு அதிக கால எல்லைகள் வழங்கப் படுவதில்லை. பங்களாதேஷ் இலங்கைக்கு வழங்கிய காலப்பகுதி 06 மாதங்கள் என்று ஞாபகம். இந்த நிலையில் ஒரு வருடத்தின் பின்னர் நாம் மீண்டும் அன்றைய நாணய மதிப்பிற்கு எமது ரூபாய்களை வாங்கிக் கொள்வதற்கான டொலர்களை செலுத்த வேண்டும்.


பொதுவாக இப்படி Currency Swap செய்யப்படும் ரூபாய்கள் நாட்டுக்கு வெளியே கொண்டு செல்லப் படுவதில்லை. அப்படிக் கொண்டு செல்லப் படும் ரூபாய்களால் எந்தப் பயனும் இல்லை. எனவே Currency Swap செய்பவர்கள் அந்த ரூபாய்களை மீண்டும் இலங்கையிலேயே முதலிடுவர். உதாரணமாக பங்களாதேஷ் மத்திய வங்கி வெளியிடும் திறைசேரி உண்டியல்களில் முதலிட்டிருந்தது.


இதனால் எமக்கு ஏற்படும் நன்மை தீமைகளைக் கணிப்பிட்டுப் பார்ப்போம்.


உலக வங்கி எமக்கு 400 மில்லியன் டொலர்களை வழங்கியபோது இலங்கையில் டொலர்களின் பெறுமதி 362 ரூபாய். இந்த நிலையில் Currency Swap இற்காக நாம் 144.80 பில்லியன் ரூபாய்களை உலக வங்கியிடம் ஒப்படைத்திருப்போம்.


உலக வங்கி அதனை மீண்டும் மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல்களில் முதலிடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். திறைசேரி உண்டியல்களின் வட்டி வீதம் தற்போது சராசரியாக ஆண்டுக்கு 30%.


அப்படி என்றால் நாம் வழங்கிய ரூபாய்களுக்கு நாம் செலுத்த வேண்டிய வட்டி மட்டும் 43.44 பில்லியன் ரூபாய்கள். எனவே ஒரு ஆண்டின் இறுதியில் நாம் உலக வங்கிக்கு செலுத்த வேண்டிய பணம் 188.24 பில்லியன் ரூபாய்கள் ஆகும்.


ஆனால் அதனை ரூபாயில் செலுத்த முடியாது. டொலர்களில் செலுத்த வேண்டும். ஆனால் இப்போது டொலரின் பெறுமதி வீழ்ச்சி அடைந்து விட்டது. தற்போதைய டொலரின் பெறுமதி 347 ரூபாய். எனவே 188.24 பில்லியன் ரூபாய்களை டொலர்களில் மாற்றும் போது ஏறக்குறைய 542.47 மில்லியன் டொலர்களை நாம் உலக வங்கிக்கு செலுத்த வேண்டி இருக்கும்.


இங்கு 120 மில்லியன் டொலர்கள் அவர்களது முதலுக்கு வட்டியாகவும், 22.47 மில்லியன் டொலர்கள் நாணயப் பரிமாற்றத்தில் எமக்கு ஏற்பட்ட நஷ்டமாகவும் அவர்களுக்கு செலுத்த வேண்டி இருக்கும்.


பிறகு என்ன அதற்குரிய செலவுகளை ஈடு செய்ய மீண்டும் பெற்றோலின் விலை கூட்டப்படும். மின்சாரத்தின் கட்டணமும் அதிகரிக்கும்.

By: Freddy Abraham



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe