ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய படையினரால் 15 வயது பலஸ்தீன சிறுவன் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டதாக பலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை (02) பின்னேரம் அஸ்ஸும் நகருக்குள் இஸ்ரேலிய இராணுவ வாகனம் ஒன்று நுழைந்தபோது இளைஞர்கள் அதன்மீது கல் எறிந்ததற்கு பதிலடியாக இஸ்ரேலிய படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று அந்த மேற்குக் கரை நகர மேயர் அஹமது எனாயா தெரிவித்துள்ளார்.
“ஆக்கிரமிப்பு (இஸ்ரேல்) படையினரால் அந்த சிறுவனின் பின்புறம் சூடு நடத்தப்பட்ட நிலையில் அவன் கொல்லப்பட்டான்” என்று பலஸ்தீன சுகாதார அமைச்சர் முஹமது நிதால் சலிம் தெரிவித்துள்ளார்.
இதன்போது குழந்தை உட்பட இருவர் காயமடைந்திருப்பதோடு குழந்தையின் நிலை மோசமாக இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அஸ்ஸுமுக்கு அருகால் கடந்து செல்லும் இஸ்ரேலிய வாகனங்கள் மீது பட்டாசுகளை வீசுவது பற்றி தேடுதலை நடத்தி வந்த இஸ்ரேலிய படையினர் மீது வெடிபொருட்களை வீசிய சந்தேக நபர்கள் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய படையினர் நாளாந்தம் சுற்றிவளைப்புத் தேடுதல்கள் மேற்கொண்டு வரும் நிலையில் பலஸ்தீனர்கள் பலரும் கொல்லப்பட்டுள்ள சூழலில் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
thanks-thinakaran