Ads Area

சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால் 24 மணிநேரம் இயங்கும் அனர்த்த முகாமைத்துவ குழு ஸ்தாபிப்பு.

 தொடர் மழை மற்றும் DS சேனநாயக்க குளத்திலிருந்து மேலதிக நீர் வெளியேற்றம் காரணமாக சம்மாந்துறைப் பிரதேசத்தில் பாதிப்புக்குள்ளான தாழ் நிலங்களை பிரதேச செயலாளர் தலைமையிலான குழு பார்வையிட்டதோடு இடைத்தங்கல் முகாம்களாக  அமைக்கப்பட்டுள்ள மல்கம்பிட்டி பாடசாலையினையும பார்வையிட்டு (10) ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.


அத்தோடு சம்மாந்துறை பிரதேச செயலக மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை என்பவற்றில் 24 மணித்தியாலயமும் இயங்க கூடிய வகையில் அனர்த்த முகாமைத்துவ குழு தாபிக்கப்பட்டுள்ளது.


அனர்த்த நிலைமைகளின் போது குறிப்பிட்ட கிராம சேவையாளரைத் தொடர்பு கொள்ளவும்.


அல்லது 

அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் அசாருத்தீன் - 0760104567 அவர்களை தொடர்பு கொள்ளவும்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe