Ads Area

பாடசாலைகளுக்கு இரு தினங்கள் விடுமுறை - வலயக்கல்விபணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம்

 நூருல் ஹுதா உமர்.


இன்று (11) ஆரம்பமாகவிருந்த கல்முனை கல்வி வலய முஸ்லிம் பாடசாலைகள் நாட்டிலும் எமது பிரதேசங்களிலும் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான அடைமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளநிலையால் இன்று (11) மற்றும் நாளை (12) ஆகிய தினங்களில் பாடசாலைகள் மூடப்பட்டு மீண்டும் எதிர்வரும் 16.01.2024 அன்று (செவ்வாய்க்கிழமை) வழமை போன்று பாடசாலைகள் இடம்பெறுமென கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.


தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், 


இவ்விடுமுறை இரு தினங்களுக்குமான பதில் பாடசாலை 20, 27ம் திகதி சனிக்கிழமைகளில் நடைபெற வேண்டுமென கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளரின் அனுமதிக்கிணங்க கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளரின் வேண்டுகோளுக்கமைவாக கல்முனை வலயக்கல்வி பணிமனை விடுத்துள்ள அறிவிப்பாகுமென அவர் மேலும் தெரிவித்தார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe