தென் இந்திய திரைப்படத் துறையில் தடம்பதித்து பல்வேறு வெற்றிப் பாடல்களை கொடுத்து வரும் இலங்கை கிழக்கு மாகாணம் பொத்துவில் பிரதேசத்தில் பிறந்த பொத்துவில் அஸ்மின் எழுதிய ”ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்” பாடலுக்கு எடிசன் விருது கிடைக்கப் பெற்றுள்ளது.
தென்னிந்தியாவின் சென்னையில் நடைபெற்ற 16வது எடிசன் விருது விழாவில், "ஐயோ சாமி" என்ற இந்தப் பாடலைப் பாடிய விண்டி குணதிலகா, 2023 ஆம் ஆண்டின் சிறந்த உணர்வுப் பாடலுக்கான விருதை வென்றுள்ளார்.
விருதினை பெற்றுக் கொண்ட வின்டி குணதிலக்க நேற்று இரவு ஸ்ரீலங்கன் எயார் விமானமான UL 218 இல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இந்த விருது வழங்கும் விழா சர்வதேச திரைப்படங்கள் மற்றும் பாடல்களை மதிப்பிடுவதற்காக நடத்தப்படுகிறது, மேலும் இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா மார்ச் 24 அன்று இந்தியாவில் சென்னையில் நடைபெற்றது. இப்பாடலை எழுதிய பொத்துவில் அஸ்மின் மற்றும் இப்பாடலுக்கு இசையமைத்த சனுக விக்ரமசிங்க ஆகியோரும் இந்த விருதுகளை பெற்றுக்கொள்ளும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.