அகில இலங்கை சமாதான நீதவானாக சாய்ந்தமருதைச் சேர்ந்த திரு. சம்சுதீன் மொஹமட் தாஜுடீன் இன்று (2024-04-25) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அகில இலங்கை சமாதான நீதவானுக்கான நியமனக் கடிதத்தினை கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி திரு. எம்.கே. மொஹமட் ரியால் அவர்களிடமிருந்து இன்று அவர் பெற்று சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் தனது ஆரம்பக் கல்வியினை ரியாலுல் ஜென்னா வித்தியாலயத்திலும், உயர்கல்வியினை மல்ஹருஸ் ஷம்ஸ் வித்தியாலயத்திலும் (MALHARUS SHAMS MAHA) மற்றும் கல்முனை ஷாஹிரா (Kalmunai Zahira Colllege) உயர்தர பாடசாலைகளிலும் கற்றுள்ளார்.
மேலும் சட்டத்துறையில் பட்டப்படிப்பினை கற்றுக் கொண்டு வரும் இவர் PGD, NCAT, NVQ L4 (GK),Dip in English போன்ற கற்கைநெறிகளையும் பூர்த்தி செய்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.