சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் தொழில் நிமிர்தமாக வாழும் சம்மாந்துறையைச் சேர்ந்த சகோதரர்களின் ஒன்று கூடலும், இப்தார் நிகழ்வும் சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உள்ள மலாஸ், அல்-மாஸ் உணவகத்தில் நேற்று (2024-03-31) இடம் பெற்றது.
இந் நிகழ்வில் தலைநகர் ரியாத்தில் பல இடங்களில் பணிபுரியும் சுமார் 50 க்கும் மேற்பட்ட சம்மாந்துறை வாழ் நண்பர்களும், குடும்பத்தினரும் வருகை தந்திருந்தனர்.
நிகழ்வில் Sammanthurai Community of Saudi Arabia அமைப்பிற்கான நிர்வாக குழு தெரிவு செய்யப்பட்டதோடு, இவ் அமைப்பின் உருவாக்கம், நோக்கம் போன்றன ஏற்பாட்டுக் குழுவினரால் எடுத்துரைக்கப்பட்டு இவ் அமைப்பின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.
சவுதி அரேபியாவில் வாழும் சம்மாந்துறையைச் சேர்ந்த அனைவரும் இவ் அமைப்பில் இணைந்து கொள்ள ஏற்பாட்டுக் குழுவினரால் அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.