தில்ஷாத் பர்வீஸ்.
சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட சமூக ஊடக ஆர்வலர்கள் ஒன்றிணைந்த சம்மாந்துறை ஊடக மையத்தின் உறுப்பினர்களுக்கும் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை பிணக்குகள் தீர்ப்பு பொறுப்பாளரும் ஓய்வு பெற்ற பிரதான பொலிஸ் பரிசோதருமான எம். எஸ். அப்துல் மஜீட் அவர்களுடனான சந்திப்பு சம்மாந்துறை ஊடக மைய காரியாலயத்தில் இன்று (14) மாலை இடம் பெற்றது.
இதன் போது சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை பிணக்குகள் தீர்ப்பு பொறுப்பாளரும் ஓய்வு பெற்ற பிரதான பொலிஸ் பரிசோதருமான எம். எஸ். அப்துல் மஜீட் அவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் சம்மாந்துறையில் காணப்படும் பள்ளிவாசல்கள், சம்மாந்துறையின் அழிந்து போகும் பழமையான வரலாறுகள், சம்மாந்துறையில் புதைந்து கிடக்கும் கலைஞர்கள் மற்றும் சாதனையாளர்கள் போன்ற பல விடயங்களை ஊடகம் என்ற ரீதியில் நீங்கள் வெளிக்கொண்டு வர வேண்டிய பொறுப்பும் , கடமையும் உங்களிடம் காணப்படுகிறது.
மேலும் எதிர் காலத்தில் சம்மாந்துறையில் இளம் ஊடகவியலாளர்களை உருவாக்கவும், சம்மாந்துறை ஊடக மையத்தை சரியான பாதையில் கொண்டு செல்லவும் பல ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை ஊடக மையத்தின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.