தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவின் வடகிழக்குப் பகுதியான தாவாத்மில் (Al Dawadmi) பகுதியில் ஒட்டகம் ஒன்றுக்கு 500 சவுதி ரியால் பணத்தை உண்ணக் கொடுத்த ஒருவரை சவுதி அரேபிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஒட்டகம் ஒன்றுக்கு 500 ரியால் பணத்தை உண்ணக் கொடுத்து அதனை வீடியோவாக பதிவு செய்து சமூகவலைத்தளத்தில் பதிவேற்றியும் உள்ளார். குறித்த வீடியோ சமூகவலைத்தளத்தில் விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில் வீடியோவின் அடிப்படையில் தற்போது குறித்த நபர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
சவுதி அரேபிய சட்டத்தின் கீழ், பண நோட்டுகளை கிழிப்பது, அவற்றின் அம்சங்களை சேதப்படுத்துவது அல்லது சிதைப்பது போன்றவற்றுக்கு அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 10,000 SR வரை அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
செய்தி மூலம் - https://gulfnews.com