Ads Area

சம்மாந்துறை நூர்ப் பள்ளிவாசல் உண்டில் உடைக்கப்பட்டு முழுப் பணமும் திருட்டு - திருடனை அடையாளம் காண வேண்டுகோள்.

தகவல் - Shihab Ibnu Ameer


சம்மாந்துறை நூர்ப் பள்ளிவாசலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல் உடைக்கப்பட்டு அதில் உள்ள அனைத்துப் பணங்களும் அண்மையில் திருடப்பட்டுள்ளது. உண்டியலை உடைத்து பணத்தை திருடும் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்புக் கெமறாக்களில் பதிவாகியுள்ளது.


குறித்த அதே திருடன் உண்டியலை உடைத்து பணத்தை திருடுவதற்கு முதல் நாளன்று காலை 9 மணியளவில் பள்ளிவாசல் காரியாலயத்துக்குள் நுழைந்து முஅத்தின் உடைய 6000 ரூபாய் பெறுமதியான பணத்தையும் திருடி சென்றிருக்கின்றான். அடுத்த நாள் பகல் வந்து உண்டியலை திருடி சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


குறித்த நபரை அடையாளம் தெரிந்தவர்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் அல்லது சம்மாந்துறை நூர்ப் பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் அறியத் தரும்படி பள்ளிவாசல் நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe