சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தின் பதிவாளர் பிரிவில் 2024.06.03 முதல் பிறப்பு, விவாக, இறப்புப் பதிவுகளின் சான்றுபடுத்தப்பட்ட பிரதிகளைப் பெறுவதற்குப் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களின்றி நேரடியாக வாய்மூல தகவல்களைக் கொண்டு விரைவாகப் பிரதிகளைப் பெற்றுக் கொள்வதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டம் பிரதேச செயலாளர் S.L. முகம்மது ஹனீபா அவர்களின் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் உதவிப் பிரதேச செயலாளர், மேலதிக மாவட்டப் பதிவாளர், நிருவாக உத்தயோகத்தர் மற்றும் பதிவாளர் பிரிவின் உத்தயோகத்தர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இதன்போது பிரதேச செயலாளரினால் விண்ணப்பதாரி ஒருவருக்கு விண்ணப்பப் படிவம் இன்றி வாய்மூலத் தகவல்களின் அடிப்படையில் பெறப்பட்ட பிறப்புப் பதிவொன்றின் சான்றுபடுத்தப்பட்ட பிரதியும் வழங்கிவைக்கப்பட்டது.