Ads Area

1.1 மில்லியன் செலவில் தனவந்தரால் எழுச்சி பெற்ற சம்மாந்துறை பிரதேச பாடசாலை.

 நன்றி - (மணல்சேனை நிருபர்)


நவீன கற்பித்தல் முறையை ஊக்குவிக்கும் முகமாக ரூ.1.1 மில்லியன் செலவில் திறன் வகுப்பறை (Smart classroom) கமு/சது/ வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ளது.


பாடசாலை அதிபர் கே.தியாகராஜாவின் தலைமையில் நேற்றுமுன்தினம் இதன் திறப்பு விழா நடைபெற்றது.


திறன் வகுப்பறைக்கான நிதியுதவி அமரர். கலாநிதி. சுதன் சுதர்சன் நினைவாக சுமதி சுதர்சன், ஷோனா சுதர்ஷன், நீலன் சுதர்சன்(USA) மனித நேயம் அமைப்பின் ஒருங்கிணைப்பில் விஞ்ஞான ஒன்றியம் மட்டு. அம்பாறை அமைப்பின் நெறிப்படுத்தலில் அமைத்துக் கொடுக்கப்பட்டது.


இந்நிகழ்வில் மனிதநேய அமைப்பின் சார்பாக சு. சிரஞ்ஜீவி மற்றும் திருமதி சிரஞ்ஜீவி, உதவிக்கல்விப் பணிப்பாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் சகாதேவராஜா, ஆசிரிய ஆலோசகர்களான ம.சந்திரகுமார், சா.மோகன், விஞ்ஞான ஒன்றியம் மட்டு அம்பாறை அமைப்பின் தலைவர் தி.கோபிநாத் இணைப்பாளர் பொறியியலாளர் வ.யதுர்ஷன், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் கு.மதிவண்ணன், பழைய மாணவர் சங்க செயலாளர் சனோஜன், பாடசாலை உப அதிபர் மா.தர்மலிங்கம், ஆசிரியர்கள், விஞ்ஞான ஒன்றிய அமைப்பின் உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


மனித நேயம் அமைப்பின் இச்சேவையை பாராட்டி பாடசாலை சமூகத்தினால் சிரஞ்ஜீவி தம்பதியினர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் விஞ்ஞான ஒன்றியம் மட்டு.அம்பாறை அமைப்பினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe