Ads Area

கல்முனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

 சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ் 


அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவரை இன்று வியாழக்கிழமை (21) கல்முனைக்குடி பிரதேசத்தில் இரவு 7.00 மணியளவில் கல்முனை விசேட அதிரடிப் படையினர் இருவரை கைது செய்துள்ளனர்.


 கல்முனை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கல்முனைக்குடி 09 பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபரொருவரும், கிரீன் ஃபீல்ட் கல்முனைக்குடி 02, பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய நபரொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரிடம் இருந்து 970 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளும், மற்றவரிடம் இருந்து 860 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. 


இதனையடுத்து, சந்தேக நபர்களை கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும், இந்த கைது நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் பணிப்புரைக்கமைய  முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe