சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்.
வீட்டில் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்தோடு விற்பனைக்காக இருந்த கசிப்பையும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினர் கைப்பற்றி உள்ளனர்.
இச்சம்பவம் இன்று (13) திங்கட்கிழமை காலை 12.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை, கணபதிபுரம் பகுதியில் கசிப்புடன் இன்று திங்கட்கிழமை (13) காலை 12.30 மணியளவில் சம்மாந்துறை ஊழல் தடுப்பு பிரிவினரினால் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கையின் போது 69 வயதுடைய சந்தேக நபர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதான சந்தேக நபரிடமிருந்து 8000 மில்லி லீட்டர் கசிப்பு மீட்கப்பட்டதுடன், சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், குறித்த சோதனை நடவடிக்கையானது சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.எம்.ரனதுங்க தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்களான சார்ஜன் அநுர, சார்ஜன் வி.டபிள்யூ. அசோக்க, சார்ஜன் டபிள்யூ.ஏ. சரத், சார்ஜன் விஜேரத்ன,பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களான சதினா,நிலந்தி உள்ளிட்ட அதிகாரிகள் இச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.